"2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால்..." - ஆ.ராசாக்கு சசிகலா கண்டனம்

x

2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால்..." - ஆ.ராசாக்கு சசிகலா கண்டனம்

எம்ஜிஆர் பற்றிய திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா பேச்சுக்கு, சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர் பெயரை உச்சரிக்க திமுகவினர் தகுதியற்றவர்கள் என்று கூறியுள்ளார். திமுகவை சேர்ந்த ஆ.ராசாவுக்கு 2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால் என்னசெய்வதென்று தெரியாமல் மனம்போன போக்கில் பேசிவருதாக கூறியுள்ளார். எம்.ஜி.ஆர். இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்களின் மனங்களில் இன்றைக்கும் நிரந்தரமாக குடி கொண்டிருக்கும் ஒப்பற்ற தலைவராக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்