"யு-டர்ன் அடித்தவர் எங்களுக்கு தேவை இல்லை"...ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு

x

பிகாரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, புர்ணியா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மணிப்பூரில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்ட போதிலும், பிரதமர் மோடி அங்கு நேரில் செல்லவில்லை என குற்றம் சாட்டினார். நாட்டின் அனைத்து துறைகளிலும் பட்டியல் இனத்தவர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என குற்றம் சாட்டினார். நாட்டில் எந்த சமுதாயத்தினர் எந்த அளவுக்கு மக்கள் தொகை உள்ளது என்பதை அறிந்து கொள்ள, சாதிவாரி கணக்கெடுப்பு தேவை எனக் குறிப்பிட்டார்.

நிதிஷ் குமாருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே அவர் யு-டர்ன் அடித்திருப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி, பிகாரில் அமைந்துள்ள மகா

கூட்டணி, சமூக நீதிக்காக போராடும் என்றார். எனவே தங்களுக்கு நிதிஷ்குமார் தேவையில்லை என ராகுல்காந்தி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்