"நாங்கள் வந்தால் 30 லட்சம் பேருக்கு.." - ராகுல் காந்தி உறுதி

x

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க மோடியிடம் ஏதாவது திட்டம் உள்ளதா என்பதே, ஒவ்வொரு இளைஞனின் கேள்வியாக உள்ளது என கூறியுள்ளார். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், 30 லட்சம் அரசு பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, முதல் வேலை என்ற திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு, வருடத்திற்கு 1 லட்ச ரூபாய் மதிப்பிலான வேலை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். கேள்வித்தாள்கள் கசிவதை சட்டம் இயற்றி தடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாய திரையை உடைத்து இளைஞர்கள் தங்கள் கைகளாலேயே, தங்களின் விதியை மாற்ற வேண்டுமென குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, இந்தியாவில் வேலை வாய்ப்பு புரட்சி ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளர்.


Next Story

மேலும் செய்திகள்