"சதி நடக்கிறது.." - ராகுல் பரபரப்பு ட்வீட் | Rahul Gandhi

x

யுஜிசியின் புதிய வரைவில், உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது என்று, ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் தோராயமாக 7 ஆயிரம் இடஒதுக்கீட்டுப் பணியிடங்களில், 3 ஆயிரம் காலியாக உள்ளதாகவும், அவற்றில் 7.1% மட்டுமே தலித், 1.6% பழங்குடியினர் மற்றும் 4.5% பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பேராசிரியர்கள் என்று தமது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூட பேசிய பாஜக-ஆர்எஸ்எஸ், இப்போது இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்ப்டட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றும், காலியிடங்களை இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களைக் கொண்டு மட்டுமே நிரப்புவோம் என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்