விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்.. SP அதிரடி உத்தரவு

x

புதுக்கோட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், எஸ்பி யின் தனிப்பிரிவு காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், அந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பிக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட, எஸ் பி தனிப்பிரிவு காவலர் முருகேசனை ஆயுதப்படைக்கு மாற்றி, மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், முறையாக டி.எஸ்.ஆர்.ஐ கையாளாத 2 காவலர்களும், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்