"பணவீக்கம் பற்றி பாஜகவின் பார்வை என்ன?" - பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி

x

2047 இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என்று கூறும் பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் செய்தது என்ன என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக பழமை வாதத்தையே பேசி வருவதாக கூறினார். 2047-ல் வளர்ச்சியை நோக்கி தங்கள் பயணம் என்று கூறும் பிரதமர் மோடியிடம், சாமானியர்கள் பற்றி என்ன பார்வை இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். வேலையில்லா திண்டாட்டம், பணம் வீக்கம் பற்றி பாஜகவின் பார்வை என்ன என்றும் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்