"பிரதமர் மோடி பொய் கூறுகிறார்.." லடாக்கில் ஓங்கும் சீனா கைகள் - ராகுல் காந்தி ஆவேசம்

x

இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என, பிரதமர் மோடி பொய் கூறுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

லடாக் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கார்கில் போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பீமாதங் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் வெறுப்பு அரசியலை பரப்பி வருவதாகவும்,

மக்களிடையே அன்பை பரப்பவே தாங்கள் முயன்று வருவதாகவும் குறிப்பிட்டார். லடாக் மிக முக்கியமான நிலப்பரப்பு என தெரிவித்த ராகுல் காந்தி, லடாக்கின் நிலத்தை சீனா ஆக்கிரமித்திருப்பது தெள்ளத் தெளிவாக தெரிவதாக குறிப்பிட்டார். இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் கூறியது முற்றிலும் பொய் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். லடாக் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண காங்கிரஸ் கட்சி துணைநிற்கும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்