பொய்யாமொழியின் நினைவு தினம்..அமைச்சர் உதயநிதி மலர் தூவி மரியாதை...

x

அமைச்சர் அன்பில் மகேஷின் தந்தை பொய்யாமொழியின் 24 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று திருச்சியில் உள்ள அன்பில் மகேஷின் அலுவலகத்திற்கு வந்த அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் ஆகியோர் பொய்யா மொழியின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அரியலூருக்கு சாலை மார்க்கமாக சென்ற போது அண்ணா சிலை அருகே 32வது நாளாக போராட்டம் நடத்தி வரும் தேசிய தென்னிந்திய விவசாய சங்கத்தினர் அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துச் சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். அப்போது, டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதி வாங்கிக் கொடுத்தால், இங்கு நடத்தப்படும் போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்