களத்தை பார்த்ததும் வந்த கான்ஃபிடன்ட்.. அடித்து சொன்ன அதிமுக வேட்பாளர்

x

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடுமலையில் உள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில், இந்த வாக்கு சேகரிப்பானது நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன், வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அவர்களுக்கு, ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் திமுக மீது பொதுமக்கள் அதிருப்தியாக இருப்பதாகவும், நிச்சயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும், தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்