"ரோடு ஷோ"வில் பள்ளி குழந்தைகள் - பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் - விளக்கம் கேட்கும் தேர்தல் அலுவலகம்

x

கோவையில் பிரதமர் ரோடு ஷோவில் பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, மாவட்ட பாஜக நிர்வாகிகள் விளக்கம் அளிக்க கோரி, தேர்தல் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது..

கோவையில் கடந்த் 18 ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பள்ளி குழந்தைகளை பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, பள்ளிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு, மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தை நல அலுவலர் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.இதனிடையே கோவை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து பள்ளி மாணவர்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்க கோரி கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்