"பெண்கள் நம் நாட்டின் கண்கள்"...பிரதமர் மோடி வாழ்த்து

x

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளின் துணிவு, மன உறுதி மற்றும் சாதனைகளைப் பாராட்டியுள்ளார். அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகளின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். நாடு மற்றும் சமூகத்தை மிகச்சிறப்பாக மாற்றியமைப்பதில் திறன் படைத்தவர்கள் என்றும் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் அரசு, பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்