நாடாளுமன்ற தேர்தல்! எங்களுக்கு என்று தனி சின்னம்.. ஜி.கே.வாசன் பரபரப்பு பேச்சு | Parliament Election

x

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை எழும்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தேர்தல் வெற்றிக்கு 100 சதவீதம் பணியாற்றுவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறினார். தேர்தல் கூட்டணி குறித்து முன்னணி தலைவர்களோடு கலந்தாலோசனை செய்து உறுதியான நிலைப்பாட்டை வரும் நாட்களில் அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்