"தீய சக்திகள் தாக்காமல் இருக்க; கருப்பு திலகமிட்ட கார்கேவுக்கு நன்றி.." - பிரதமர் மோடி

x

மாநிலங்களவை உறுப்பினர்களான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஜே.பி நட்டா, ஜெயா பச்சன் உள்ளிட்ட 56 உறுப்பினர்களின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வில் பிரதமர் மோடி வாழ்த்தி பேசினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை நினைவுகூர்ந்த பிரதமர், நீண்ட காலம் அவையையும் தேசத்தையும் வழிநடத்தியதன் காரணமாக, நம் நாட்டின் ஜனநாயகம் பற்றிய ஒவ்வொரு விவாதத்திலும் அவர் இடம்பிடிப்பார் என தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்றதையும், அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருப்பு அறிக்கை வெளியிட்டதையும் மறைமுகமாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இதை தங்கள் அரசின் மீதான கருப்பு திலகமாக எடுத்துக் கொள்வதாக குறிப்பிட்டார். கருப்பு திலகம் தீய சக்திகளை ஒழிக்கும் என்றும், தீய சக்திகளால் பாதிக்கப்படாமல் இருக்க கருப்பு திலகமிட்ட கார்கேவுக்கு நன்றி என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்