"வாங்க உங்களுக்கு பனிஷ்மெண்ட் இருக்கு.." - 8 எம்பிக்களை திடீரென அழைத்து பிரதமர் மோடி செய்த செயல்

x

17 ஆவது மக்களவையில் கடைசி கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சக எம்.பிக்களை அணுகிய பிரதமர் மோடி, உங்களை தண்டிக்கப் போகிறேன்... என்னோடு உணவு அருந்த வாருங்கள் என்று கேண்டீனுக்கு அழைத்துச் சென்றார். இணை அமைச்சர் எல்.முருகன், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன் நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. ரித்தேஷ் பாண்டே, ஒடிசாவின் பிஜூ ஜனதா தள் எம்.பி. சஸ்மித் பாத்ரா, லடாக்கை சேர்ந்த எம்.பி. ஜம்யங் நம்யால், மகாராஷ்டிராவை சேர்ந்த ஹீனா கேவிட் ஆகியோர், பிரதமர் மோடியுடன் மதிய உணவு அருந்தினர். 40 நிமிடங்கள் ஒன்றாக உணவு அருந்திக்கொண்டு, பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர், அனைவரும் சாப்பிட்டதற்கான பில்லை, பிரதமர் மோடி தனது சொந்த பணத்தில் செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்