"உங்களுக்குலாம் வெட்கமா இல்ல" - மோடிக்கு வந்த கோபம்.. ஆக்ரோஷ பேச்சு

x

ஜார்க்கண்ட் மாநிலம், சிங்பூம் தொகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஊழல், முறைகேடுகளில் சிக்கிய பிறகும் காங்கிரஸ் மற்றும் ஜே.எம்.எம். தலைவர்கள் வெட்கமின்றி மக்களை சந்திக்க வருகிறார்கள் என்று கூறினார். மக்களின் நன்மைக்காக அல்லாமல், கட்டற்ற கொள்ளையை கட்டவிழ்த்து விடுவதற்காகவே டெல்லியில் அவர்கள் ஆட்சியமைக்க விரும்புவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

பீகாரில் காட்டாட்சியை கொண்டு வந்த இந்தியா கூட்டணி, அதை ஜார்க்கண்டிலும் பரவச் செய்து வருகிறது என்றும், ஜார்க்கண்டிற்கு துரோகம் இழைப்பதில் இந்தியா கூட்டணி உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

2014-க்கு முன்பு, நாட்டை கொள்ளையடிப்பதைத் தவிர வேறு எந்த வேலையும் அவர்கள் செய்யவில்லை என்றும், அவர்களின் ஆட்சியில் ஆதிவாசி மக்கள் பட்டப்பகலில் கொல்லப்பட்டனர் என்றும் கூறினார். ஆதிவாசிகளை பதற்றத்தில் வைத்திருக்கவே இந்தியா கூட்டணி விரும்புகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்