பிரதமர் பேசிய பேச்சு.. கனிமொழி கேட்ட நச் கேள்வி

x

பிரதமரின் வெறுப்பு பேச்சு நாடு முழுவதும் மணிப்பூர் போல மாற்றப்படுமோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். நீலம் பண்பாட்டு மையத்தின் கலைத் திருவிழா மற்றும் ஓவியக் கண்காட்சி சென்னை லலித் கலா அகாடமியில் நடைபெற்றது. இதில் நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனரும் இயக்குனருமான பா.ரஞ்சித், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஓவியர் சந்ரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, இந்த நாட்டின் குடிமக்கள் எல்லோருக்கும் இருக்கக் கூடிய உரிமைகள், இஸ்லாமியர்களும் இருப்பதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்