"கேள்வி நேரத்தின் போது ஒருநாள் கூட நாடாளுமன்றம் வராத மோடி" - ஆ.ராசா தாக்கு

x

கேள்வி நேரத்தின்போது பிரதமர் மோடி ஒரு நாள் கூட நாடாளுமன்றம் வந்ததில்லை என்று திமுக எம்.பி. ராசா குற்றம்சாட்டினார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட அவிநாசியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பேசிய அவர், கொடுத்த வாக்குறுதிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தனது திறமையான ஆட்சியால் நிறைவேற்றி உள்ளார் என்றார். தமிழக அரசுக்கு மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்றும், இதனால் பல சவால்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என்றும் கூறினார். பிரதமர் மோடி, கேள்வி நேரத்தின்போது ஒரு நாள் கூட நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்