சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

x

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னையைச் சேர்ந்த அஸ்வின் பல சாதனைகளை முறியடித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல், தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்திர ராஜனும் தனது வாழ்த்துகளை அஸ்வினுக்கு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்