'மிக்ஜாம் புயல்'.. முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய மம்தா பானர்ஜி

x

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புயல் காரணமாக தமிழகத்தில் 16 உயிர்கள் பலியானது குறித்தும், புயல் ஏற்படுத்தியுள்ள சேதங்கள் குறித்தும் தான் வேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். தனது சகோதரர் முதல்வர் ஸ்டாலின், பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை துணிவுடன் வழிநடத்தி வருவதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதல் மற்றும் ஆதரவை தெரிவிப்பதாக, மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்