கூட்ட நெரிசலில் நின்ற மாற்றுத்திறனாளி பெண்ணை அழைத்து - மனு வாங்கிய அமைச்சர் உதயநிதி

x

திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார் மூலம் சேலம் மாவட்டம் சங்ககிரி வழியாக சென்று கொண்டிருந்தார். பள்ளிபாளையம் பிரிவு சாலையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாற்றுத் திறனாளியான தாரணி என்ற பெண் மனு அளிக்க பெற்றோருடன் நின்று கொண்டிருந்தார். கூட்ட நெரிசலில் நின்று இருந்த அந்த பெண்ணை அழைத்து அவர் அளித்த மனுவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெற்று கொண்டார். அரசு வேலை வேண்டும் என்ற அந்த பெண்ணின் கோரிக்கை குறித்து பரிலிப்பதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்