"தேர்தலுக்குப் பின் அவர்கள் காணாமல் போவார்கள்" - அமைச்சர் ரோஜா பரபரப்பு கருத்து

x

வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஜெகன் மோகன் ரெட்டிதான் ஆட்சி அமைப்பார் என்று அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்... ஆந்திர மாநிலம் தடா அருகே ஆந்திர மாநில சுற்றுலாத்துறை சார்பாக புதிதாக கட்டப்பட்ட விருந்தினர் மாளிகை திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், கூட்டணி தெளிவில்லாமல் சந்திரபாபு நாயுடு தள்ளாடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்... மேலும், 2024 தேர்தலுக்குப் பிறகு தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா பவன் கல்யாண், காங்கிரஸ் சர்மிளா ஆகியோர் காணாமல் போய்விடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்...


Next Story

மேலும் செய்திகள்