பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. ரூ.96,317 கோடிக்கு ஏலம் விட முடிவு

x

96 ஆயிரம் கோடி மதிப்பிற்கான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஏலம் விட, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்திடும் விதமாக, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஏலம் விட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 96 ஆயிரத்து 317 கோடி மதிப்புள்ள 10 ஆயிரத்து 523 மெகாஹெட்ஸ் அளவுள்ள, அலைக்கற்றைகளை ஏலம் விட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்பெக்ட்ரம் ஏலம், தொலைத்தொடர்பு சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்