நீதிமன்றத்தில் அமைச்சர் KN நேரு ஆஜர்... நீதிபதி போட்ட உத்தரவு

x

கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல்15ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திமுக சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததாக கே.என் நேரு உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணைக்காக, அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்டோர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். இதையடுத்து வரும் ஜனவரி 11ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே திமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர்


Next Story

மேலும் செய்திகள்