அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வேதனை

x

வீடு கட்டும் போது நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டவில்லை என்றால் பொதுமக்களுக்கு மனசு ஆறுவதில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ராஜபாளையத்தை கார்பன் சமநிலை பகுதியாக உருவாக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் மெய்யநாதன், அதிகாரிகள் கலந்து கொண்டு, கார்பன் சமநிலை குறித்த அறிக்கையை வெளியிட்டனர். பின்னர் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கண்மாய்கள், வாய்க்காளர்கள் ஆக்கிரமிக்கப்படாத ஊர்களே இல்லை என்றார். ஆக்கிரமிப்பு செய்யாமல் இருந்தாலே சுற்றுச்சூழல் தானாக வரும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்