முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினம்..மெரினா நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி

x

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். விடுமுறைக்கு கடற்கரைக்கு வந்த பொதுமக்களும், வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வந்த பயணிகளும் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர். பின்னர் அந்த வளாகத்தில் இருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் சிலை முன்பு செல்ஃபி எடுத்துக் கொண்டனர். சென்னை புரசைவாக்கத்தில் இருந்து வந்த பவானி என்ற பெண், நினைவிடத்தில் வாழையிலை படையிலிட்டு அஞ்சலி செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்