"பொட்டல் காட்டில் மருத்துவக் கல்லூரி"அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றச்சாட்டு

x

நாகப்பட்டினத்தில் சொந்த நிலத்தின் விலையை அதிகரிக்கச் செய்வதற்கு அதற்கு அருகிலேயே தகுதியற்ற இடத்தை மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தேர்வு செய்தார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். நாகை மாவட்டம், திட்டச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட 7 ஆரம்ப சுகாதார நிலையங்களை அவர் திறந்து வைத்தார். மருத்துவ நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாகை மருத்துவ கல்லூரிக்கு தகுதியற்ற இடத்தை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தேர்வு செய்ததாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்