"இன்னும் 2 நாட்களில்..." - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

x

இந்தியாவிலேயே முதன்முறையாக வயது முதிர்ந்தவர்களுக்கான பிரத்யேக மருத்துவமனை, சைதாப்பேட்டையில் இன்னும் இரு தினங்களில் திறக்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர், மழைக்காலத்தில் சைதாப்பேட்டை அதிகம் பாதிப்படைவதைத் தடுக்கும் வகையில், அடையாறு ஆறு பாலத்தை மேம்படுத்த ரூபாய் ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். இன்னும் 2 நாட்களில் வயது முதிர்ந்தவர்களுக்கான பிரத்யேக மருத்துவமனையை சைதாப்பேட்டையில் திறக்க இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்