"சட்டப்பேரவையில் துட்சாதன நாடகம்.." - அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்

x

தமிழ்நாடு சட்டப்பேரவையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவி​டம், திமுகவினர் அநாகரீகமாக நடந்து கொண்டது தமிழக மக்கள் அறிந்ததே என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துட்சாதன நாடகத்தை அரங்கேற்றிய மூத்த அமைச்சரையும், அதை வேடிக்கை பார்த்த பல சாட்சிகளையும் வைத்து கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின், ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு உண்மையைத் திரித்து சொல்லியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்