`வாக்கிங்' சென்றவாறு `வாக்கு' சேகரிப்பு... CM-ஐ கண்டதும் துள்ளி வந்த பள்ளி குழந்தைகள்

x

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் திருவண்ணாமலை தேரடி வீதியில் நடைபயிற்சி செய்தபடி வாக்கு சேகரித்தார்.

கடலை கடை சந்திப்பில் உள்ள காய்கறி சந்தையில் வியாபாரிகளிடம் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்... தொடர்ந்து தேரடி வீதியில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர் ராஜகோபுரம் அருகே கடை வைத்துள்ள வியாபாரிகளிடம் சென்று நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார். இரு புறங்களிலும் இருந்த பொது மக்களிடம் கையசைத்தவாறு உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்த பொழுது பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள் முதல்வருடன் ஆர்வமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள டீ கடையில் அமர்ந்து தேனீர் பருகினார்... தொடர்ந்து அவரிடம் கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் என பல தரப்பட்டவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இன்று மாலை திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்