கைநழுவிய கரும்பு விவசாயி சின்னம்? சீமானுக்கு கிடைக்குமா..? நாளை காத்திருக்கும் விடை... | Seeman

x

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கும் ஆணையிட்டது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், 20 ஆம் தேதி துவங்கவுள்ளது. இதனை சுட்டிக்காட்டி சீமான் தரப்பு வழக்கறிஞர், தங்களது மேல்முறையிட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி, உச்சநீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்