"இதை நடத்தி காட்டுவோம்" ராகுல் காந்தி அதிரடி பேச்சு

x

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம் என்று, மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் மத்திய பிரதேசத்தில் உள்ள ஷதோல் பகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது, மத்திய பிரதேச மாநிலமானது, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் ஆய்வகமாக திகழ்வதாகவும், இறந்து போனவர்களுக்கு சிகிச்சை அளித்து, கோடிக்கணக்கான பணத்தை பாஜக கொள்ளையடித்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். வியாபம் ஊழல் காரணமாக, மத்திய பிரதேசத்தில் ஒரு கோடி இளைஞர்களின் எதிர்காலம் வீணடிக்கப்பட்டிருப்பதாகவும், 40 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டில் ஓபிசி பிரிவினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினத்தவர் ஆகியோர் குறித்த உண்மைகளை தெரிந்து கொள்வதற்கான வரைபடம்தான் சாதிவாரி கணக்கெடுப்பு என்று கூறிய ராகுல் காந்தி, என்ன ஆனாலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி காட்டுவோம் என்றும் உறுதியளித்தார்.



Next Story

மேலும் செய்திகள்