"நடைபெறாது" - அமைச்சர் சொன்ன பதில் | kn nehru

x

"நடைபெறாது" - அமைச்சர் சொன்ன பதில்

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகள் இணைப்பு தற்போது உள்ள தலைவர்களின் பதவிக்காலம் முடியும் வரை நடைபெறாது என, அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சட்டப்பேரவையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பது, பேரூராட்சியை நகராட்சியுடன் இணைப்பது என்பதெல்லாம் கடந்த காலத்தில் தீர்மானங்கள் போடப்பட்டதாகவும், இதுசம்பந்தமாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தீர்மானம் போட்டு அந்த தலைவர்கள் ஒப்புதலோடுதான் இணைக்கப்படும் என்றும், பொது மக்களின் கருத்து கேட்டு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்