பெங்களூரு குண்டு வெடிப்பு விவகாரத்தை கையில் எடுத்த பிரதமர்

x

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பெலகவி, உத்தர கன்னடா, தாவண்கெரே, பெல்லாரியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். கர்நாடாகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு சட்டம் ஒழுங்கு முற்றிலும் குலைந்து விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்தில் குண்டு வெடித்த சம்பவத்தை குறிப்பிட்ட பிரதமர் மோடி தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக காங்கிரஸ் தடை செய்யப்பட்ட PFI போன்ற பயங்கரவாத இயக்கங்களை பயன்படுத்துவதாகவும், அவர்களை மறைமுகமாக ஊக்கப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். தீவிரவாதிகளை கொன்றால் காங்கிரஸ் கட்சிக்கு கண்ணீர் வருகிறது என்றும் பிரதமர் மோடி விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்