"வீடே பாதி பாகிஸ்தான்" - பாஜக மூத்த தலைவர் பேச்சால் வெடிக்கும் சர்ச்சை

x

கர்நாடகா அமைச்சர் தினேஷ் குண்டு ராவின் வீடே பாதி பாகிஸ்தான் என பாஜக மூத்த தலைவர் பசன்ன கவுடா பாட்டீல் எத்னால் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உணவகம் ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பாஜக நிர்வாகி ஒருவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. இதனை சுட்டிக்காட்டிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், இஸ்லாமியர்களை குறிவைக்கும் பாஜக தற்போது என்ன பதில் சொல்லப்போகிறது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் பசன்ன கவுடா பாட்டீல், அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் மனைவியின் மதத்தை விமர்சிக்கும் வகையில், அவரது வீடே பாதி பாகிஸ்தான் எனத் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்