"என்னோட சம்பளம் மொத்தத்தையும் கல்விக்காக செலவு செய்கிறேன்.." - காங்கிரஸ் எம்.பி.,விஜய் வசந்த்

x

கன்னியாகுமரியில் தீவிர பிரச்சாரங்களுக்கு நடுவே, காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மீண்டும் எம்.பியாக வெற்றி பெற்றால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், கன்னியாகுமரியை உலகத்தரத்திலான சுற்றுலாத் தளமாக மாற்றவும் நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தர். மேலும், இதுவரை கன்னியாகுமரியில் ஆறு முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளேன்... எம்.பி. பதவிக்கான சம்பளம் முழுவதையும், மாணவர்களின் கல்விக்காக செலவளித்து வருகிறேன்... மீண்டும் எம்.பியானால், இந்த செயல்பாடுகளும் தொடரும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்