ஜார்க்கண்ட் அரசியலில் அடுத்த திருப்பம் - ஹேமந்த் சோரனுக்கு அனுமதி

x

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 5-ஆம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அம் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பதவியேற்றது. சம்பாய் சோரன் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த் சோரேன், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த ராஞ்சி சிறப்பு நீதிமன்றம், ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்