காயத்துடன் கர்ஜிக்கும் ஜெகன்.. "ஓட்டு BJP-க்கு சாதகமாக மாறும்.." ஆந்திராவை அலறவிடும் அரசியல் களம்

x

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா மாவட்டம் புலிவெந்தலா தேர்தல் அதிகாரியிடன் இன்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆந்திராவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகள், 175 சட்டமன்ற தொகுதிகளை ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் எனவும், எங்களுடைய வெற்றியை யாரும் தடுத்து நிறுத்த இயலாது எனவும் ஆவேசமாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு போடும் ஓட்டு மறைமுகமாக தெலுங்கு தேசம், பாஜக கூட்டணிக்கு சாதகமாக மாறும் என்று தெரிவித்த அவர், பொதுமக்கள் கடந்த ஐந்தாண்டு காலத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளை கருத்தில் கொண்டு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்