"சும்மா டிரெய்லர்தான்"... கண்ணீர் விட்டு கதறிய ரோஜா - வந்து விழுந்த பதிலடி

x

திருப்பதியில் அமைச்சர் ரோஜா கண்ணீர் மல்க பேட்டியளித்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிரணி தலைவி அதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார். விசாகப்பட்டினத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பேசிய வாங்கலபுடி அனிதா, அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா என கேள்வி எழுப்பினார். முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி, மருமகளை தரக்குறைவாக பேசிய அமைச்சர் ரோஜா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், சத்தியநாராயணா மூர்த்தி பேசியதை மறைக்கவே ரோஜா கண்ணீர் விட்டு அனுதாபம் தேடுவதாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்