"3 வருஷம் ஆச்சு ஆட்சி மாறி இன்னும் ஈபிஎஸ் படம் இருக்கு.." .. "மனசாட்சியே இல்லையா மா உனக்கு.."

x

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இரவு நேரத்தில் காவேரிப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் சுகாதார நிலைய கட்டடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது சுகாதார நிலைய மருத்துவரிடம் செல்போனில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார நிலையம் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை எனக் கூறினார். மேலும், ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகும் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் ஏன் சுகாதார நிலையத்தில் இருப்பதாக சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்