இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?..ஒரே வார்த்தையில் ஆப் செய்த செல்வப்பெருந்தகை

x

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் இந்தியாவையே மீட்டெடுப்போம் என்று விருதுநகரில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்...

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பாசிச பாஜக அரசை அகற்றி, நல்லாட்சி மலர்ந்திட இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்...

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை வரும் 8ம் தேதி சென்னையில் வெளியிட இருப்பதாகத் தெரிவித்தார்... மேலும், இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதைப் பற்றி எதிர்க்கட்சிகள் கவலைப்பட வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்...


Next Story

மேலும் செய்திகள்