"இந்தியா கூட்டணி வளர்ச்சியின் எதிரிகள்.." - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

x

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மோதி, தன்பத் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். ஜார்க்கண்ட் முத்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் கட்சி, பழங்குடியினர்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதியதாக குற்றம் சாட்டிய பிரதமர், திறமையான இளைஞர்களை ஒருபோதும் ஊக்கப்படுத்த மாட்டார்கள் என்றார். வளர்ச்சி துரித வளர்ச்சி என்பதுதான் பாஜகவின் நோக்கம் என்ற அவர், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வளர்ச்சியின் எதிரிகளாக திகழ்வதாக குறிப்பிட்டார். ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என நினைப்பதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, எத்தகைய அழுத்தங்கள் கொடுத்தாலும் ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை வழங்கிக் கொண்டே இருப்பேன் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்