"அதிகரிக்கும் இணையதள குற்றங்கள்" - முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு

x

இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 9.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இணையதள குற்றங்கள் தொடர்பான அழைப்புகள் பெருகி வரும் நிலையில் ஏற்கெனவே உள்ள அழைப்பு மையத்தையும், கட்டுப்பாட்டு அறையையும் விரிவாக்கம் செய்ய இருப்பதால்,

முதற்கட்டமாக இந்த ஆண்டுக்கு 310 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார். அதன்படி, அழைப்பு மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறையை 15 இருக்கைகள் கொண்ட மையமாக விரிவாக்கம் செய்வதற்கு 9.28 கோடி ரூபாய் நிர்வாக அனுமதி அளித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்