பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடும் சட்டப்பேரவை.. தாக்கலாகும் முக்கிய தீர்மானம்

x

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர், இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுவதுடன், மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. தொடர்ந்து, 2023-24 ஆம் ஆண்டு கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். பின்னர், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிட, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவரவுள்ளார். அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அத்தீர்மானத்தை நிறைவேற்ற, தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய கூட்டம் முடிந்தபின் அலுவல் ஆய்வுக்குழு கூடி, சட்டப்பேரவை தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்