"மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை" - விளக்கம் கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

x

மகாத்மா காந்தியை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது பேச்சுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாத்மா காந்தியை அவமரியாதை செய்தேன் என்று கடந்த 3-4 நாட்களில் சில ஊடகங்கள் தவறான எண்ணத்தை உருவாக்க முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேதாஜியின் 127வது பிறந்தநாளில் பேசியதை,சில ஊடகங்கள் தவறாக சித்தரித்து வெளியிட்டன என்று கூறியுள்ளார். நமது தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை எனது உரையில் விரிவாகக் கூற முயன்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.காந்தியை நான் மிகவும் மதிக்கிறேன் என்றும், அவருடைய போதனைகள் என் வாழ்க்கையின் லட்சியங்களாக இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்