"வேறுபாடுகளுக்கு மத்தியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்"...பொங்கல் விழாவில் ஆளுநர் ரவி நெகிழ்ச்சி

x

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி பொங்கலிட்டு மகிழ்ந்தார். சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி பாரம்பரிய உடையணிந்து, தனது மனைவியுடன் பங்கேற்றார். பின்னர் இருவரும், பானையில் பொங்கலிட்டனர். விழாவில் பேசிய ஆளுநர் ரவி, நாட்டில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றார். வெவ்வேறு பழக்க வழக்கங்கள், வெவ்வேறு மொழிகள் இருந்தாலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதுதான் நமது பாரதம் என்ற குடும்பத்தின் அழகு என பெருமிதம் தெரிவித்தார். பேச்சின் துவக்கத்தில் ஆளுநர், தமிழில் வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்