இலவச பயணம்.. பெண்களிடம் சாதி கேட்பதா? எச்சரித்த ஈபிஎஸ்

x

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், அரசு பேருந்தில் இலவசப் பயணம் மேற்கொள்ளும் மகளிரிடம், பெயர், வயது, சாதி, மொபைல் எண் உள்ளிட்ட கேட்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களிடம் பெயர், வயது, மொபைல் எண்ணை கேட்பது தனி மனித உரிமையில் தலையிடும் செயல் என்றும் கூறியுள்ளார். உலகில் எங்கும், எவ்வித பொது போக்குவரத்திலும் இது போன்ற கேள்விகளை கேட்பதில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே சில மாவட்டங்களில் சாதி ரீதியான வேண்டாத நிகழ்வுகள் நடந்து வரும் சூழலில், இது போன்ற கேள்விகள் தேவையற்ற விளைவுகள் ஏற்படுத்த நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், இதுபோன்ற விவரங்களை பெண்களிடம் சேகரிப்பதை போக்குவரத்துத்துறை உடனடியாக நிறுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்