"இதுவே கடைசி தேர்தலாக அமைந்து விடும்" - எச்சரித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்

x

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதில் சிறு தவறு நிகழ்ந்தால் கூட இந்தியாவில் நடைபெறும் கடைசி தேர்தலாக இது அமைந்துவிடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற திமுக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் திமுக வேட்பாளர் பிரகாஷை கூட்டணித் தலைவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற கூட்டணிக் கட்சியினர் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சிறு தவறு நடந்தால் கூட இது, இந்தியாவில் நடைபெறும் கடைசி தேர்தலாக அமைந்து விடும் என்றும் அவர் எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்