காலை 11 மணி முதல்.. 40 தொகுதிகளில்.. - அதிரப்போகும் அரசியல் களம்

x

மக்களவை முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது..

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்பு மனு பெறப்படும் எனவும், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 27ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்