"நிலைமை கைய மீறி போய்டுச்சு.. இன்னும் மவுனம் ஏன்?" - ஈபிஎஸ் உச்சகட்ட வேதனை

x

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இலங்கைக்குக் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில் தொடர்ந்து குரல் கொடுத்து, அரசின் கவனத்திற்கு பல்வேறு விஷயங்களைக் கொண்டு வந்த சமூக பொறுப்பாளர்கள் பலர், தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாடு காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்