முன்னாள் அமைச்சர் வீட்டில் ED ரெய்டு.. 8 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவு

x

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற இந்த சோதனையில், வீட்டில் இருந்த அவரது தந்தையிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், சுகாதரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது குட்கா முறைகேடு மற்றும் தேர்தலின் போது பணம்பட்டுவாடா ஆகிய புகார்கள் உள்ள நிலையில், இதனடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனையின் முடிவில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்